Skip to main content

ЁЯФ┤ЁЯФ┤роЗрой்ро▒ைроп рооுроХ்роХிроп роЪெроп்родிроХро│் ЁЯФ╡ЁЯФ╡

®~~19/12/16~~®

🔴🔵பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை டில்லி புறப்பட்டு சென்றார். 

🔴🔵உத்தர்கண்டில் திருவள்ளுவர் சிலை இன்று மீண்டும் நிறுவப்பட உள்ளது

🔴🔵ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் ரூ.749 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததை தில்லியில் உள்ள கருப்புப் பணத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

🔴🔵இந்திய ராணுவத்துக்கு புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டிருப்பதை அரசியலாக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு பாஜக வேண்டுகோள் விடுத்தது.

🔴🔵500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வரும் 22-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நாடாளுமன்ற குழுவினரிடம் விளக்கம் அளிக்கவுள்ளார்.

🔴🔵பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மத்திய போலீசார், துணை ராணுவ படையினர் படம் பிடிக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என 3 பக்க விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

🔴🔵இந்தியா, உலகின் சாலை விபத்துத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளது.

🔴🔵மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.70 கோடி டெபாசிட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

🔴🔵தி.மு.க., தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்,'' என, அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., கூறினார்

🔴🔵மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

🔴🔵ஜெ., மரணம் குறித்த உண்மை தகவல்களை வெளியிட வேண்டும்' என, ஆர்.கே.நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

🔴🔵புதுச்சேரியில், 11 மாதங்களுக்கு முன் மாயமான, போக்குவரத்து போலீஸ்காரரை அடித்து கொலை செய்த, தனியார் கல்லுாரி தாளாளர் மற்றும் கூலிப்படை தலைவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.

🔴🔵சென்னையின் பல இடங்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு உயிர் இருந்தால், அவற்றை அதே இடங்களில் நட வேண்டும்,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்

🔴🔵பத்திரிகையாளரான தீபாவிடம் தந்தி டிவியின் 'கேள்விக்கென்ன பதில்' குழு பேட்டி கண்டுள்ளது.இந்த பேட்டி இன்று இரவு 9 மணிக்கும், மறு ஒளிபரப்பு நாளை பிற்பகல் 2 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

🔴🔵சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் மொபைல் சிக்னல் பிரச்னை தீர்க்கப்படாததை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

🔴🔵ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 70க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. காவிரியில் நீரோட்டம் இல்லாததால், வெளியூர் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப முடியாது' என, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🔴🔵கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை சாமானிய மக்கள் சுகமான சுமையாக கருதுகின்றனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

🔴🔵ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு செல்லிடப்பேசியை கொண்டுவர முதல்வர் சந்திரபாபு நாயுடு தடை விதித்துள்ளார். 

🔴🔵கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பச் சென்ற வாகனத்துடன் டிரைவர் மாயமான வழக்கில், ரூ. 20 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது. தப்பிய வேன் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

🔴🔵உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கு தடை என்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச தேர்தலில் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரித்தார்

🔴🔵ரூபாய் நோட்டு குளறு படிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் சரியான திட்டமிடல் இன்மையே காரணம் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறினார்.

🔴🔵உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் படேல் வரவேற்றுள்ளார்.

🔴🔵உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கி அமைப்பு முறை மீதும் ரிசர்வ் வங்கி மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

🔴🔵கேரள மாநிலம், கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலித் மாணவர் ஒருவரை அவருடன் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள் நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்துள்ளனர். இதில் அவருக்கு சீறுநீரகம் பாதிக்கப்பட்டது.

🔴🔵சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் அமைப்பதற்கான பீடம் அடிக்கல் நாட்டு விழா ஏப்., ஏழாம் தேதி நடைபெறுகிறது. 

🔴🔵மலையாள எழுத்தாளரும், நாடக நடிகருமான கமல் சி. சவாரா மீது தேசிய கீதத்தை அவமதித்தாக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கேரள மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

🔴🔵தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய பைய்ர் ஆங்கில நூலுக்கு பெங்களூரு இலக்கிய விழா விருது கிடைத்துள்ளது.

🔴🔵உத்தரகாண்ட்டில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. 

🔴🔵உ.பி., மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த, 26 வயது பெண், 11 பேரை திருமணம் செய்து, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

🔴🔵உ.பி., அரசு சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.தேர்தலுக்காக நாடகம்.

🔴🔵மல்லையாவின் சொத்துகள் 3வது முறையாக இன்று ஏலம்

🔴🔵இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோப்பையை மீண்டும் தட்டிச் சென்றது அத்லெடிகோ டி கொல்கத்தா அணி. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அது கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

🔴🔵உலகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடா டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையான நீர் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Comments