Skip to main content

ЁЯФ╡ЁЯФ┤роЗро░ро╡ு роЪெроп்родிроХро│்ЁЯФ╡ЁЯФ┤

®~~18/12/16~~®

💥மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தனியாக நிரந்தர தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1956-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

💥அடையாளம் தெரியாதவர்களிடம், கட்சிகள் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேல், வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

💥பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு வாபசை தொடர்ந்து, நாட்டில் பல அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறி விட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர் கூறியுள்ளார்.

💥வர்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகை தர உள்ளது.

💥தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ள பிபின் ராவத்தின் பதவி உயர்வு குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. மூத்த அதிகாரிகள் இருவர் இருக்க இவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

💥தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவை இன்று மாலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்தார்.
நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில், இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினார்.

💥மக்களவை சரிவர நடைபெறாத போது முழு சம்பளம் தேவையில்லை எனக் கூறி சம்பளத்தின் ஒருபகுதியை திருப்பி அளித்தார் பிஜு ஜனதா தள எம்.பி ஜெய் பாண்டா

💥ஹரித்வார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நாளை திறக்கப்படும்  - உத்ரகாண்ட் மாநிலத்தின் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் தகவல்

💥இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமே இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்    தெரிவித்துள்ளார்.

💥பெங்களூருவில் வங்கி ஏடிஎம்யில் பணம் நிரப்பச் சென்ற வாகனம் ரூ.20 லட்சத்துடன் மாயமாகியுள்ளது. பெங்களூரு விமான நிலையம் அருகே வேனை விட்டுவிட்டு பணத்துடன் ஓட்டுனர் திப்பிச்சென்றுள்ளார். வேனை ஓட்டிச் சென்ற அசாமை சேர்ந்த ஹூசைன் என்பவருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றது.

💥வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்ட கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதிக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

💥கேரளா மாநிலம் திருச்சூரில் 22 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ஒரு குழுவாக இனைந்து ராகிங் செய்துள்ளனர். ராகிங் செய்யப்பட்ட மாணவரின் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

💥தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மன்னார்குடி பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

💥டெல்லி விமான நிலையத்தில் ₹2.77 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

💥பல பணக்காரர்களை கல்யாணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவுஇந்தூரை சேர்ந்த இளம்பெண் மேகா பார்கவ்,28, என்ற இளம்பெண் பலரை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

💥சென்னையில் சென்ட்ரல் ரயில்வே நிலையம் உட்பட, 27 ரயில் நிலையங்களில், ரொக்கமில்லா பணபரிமாற்றத்திற்காக, ஸ்வைப் மிஷன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

💥நெல்லை ல்யில் கொடுத்தக் கடனை திருப்பித் தராமல் டிமிக்கி கொடுத்து வந்த தகப்பனை பிடிப்பற்கு பதிலாக அவரது மகனை கடன் கொடுத்த கும்பல் ஒன்று கடத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

💥ஐதராபாத் நகரில் மாசப் டேங்க் என்ற இடத்தில் கே.பி.எஸ். வங்கி மேலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த கே.பி.எஸ். வங்கி மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

💥செங்கோட்டையில்  அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில்கள் கடத்தப்பட்டதில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

💥கோவையில் தனியார் மொபைல் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் இந்த செல்போன்களை வாங்க மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

💥விருதுநகர் அருகே, நூறு நாள் வேலை திட்டத்தில், 80 முதல் 100 நாட்களாக சம்பளம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

💥திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

💥திருச்சி உறையூரில் உள்ள குப்பைத் தொட்டியில் துண்டு துண்டாக கிழிந்த நிலையில் 1000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளது

💥வைகோவை திமுகவினர் தடுத்ததற்கு வருத்தம் - ஸ்டாலின் அறிக்கைக்கும் வரவேற்பு: திருமாவளவன்

💥தந்தி டிவியில் தீபாவின் பரபர பேட்டி நாளை ஒளிபரப்பு

💥அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக முயலாது என பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.

💥தி.மு.க., தலைவர் கருணாநிதியை காவிரி மருத்துவமனையில் நடிகர்கள் சந்தித்தனர். திரைப்பட சங்க நிர்வாகி விஷால் , நடிகர் வடிவேல் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர்.

💥ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து என்னை கைது செய்தது ஏன் என முன்னாள் தளபதி தியாகி கேள்வி எழுப்பியுள்ளார்.

💥காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம், முற்றிலுமாக ரொக்கப் பண பரிவர்த்தனை இல்லாத 'கேஷ்லெஸ்' ஊராக மாறி அசத்திக் காட்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் மத்திய பகுதியிலுள்ள புத்காம் மாவட்டத்திலுள்ள லனுரா கிராமத்தில்தான் பொதுமக்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது

💥ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது -லக்னோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜூனியர் உலக சாம்பியன் ஆனது இந்தியா
2001ஆம் ஆண்டில் ஏற்கெனவே ஜூனியர் உலகக் கோப்பையை வென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி அசத்தல்.

💥ஏமனின் தெற்கு துறைமுக நகரான ஏடன் பகுதியில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 30 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாயினர்.

💥ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் 5 பெண் பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

💥இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய பதுங்கியிருந்த சீன நாட்டவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

💥இந்தோனேஷியாவின் திம்கா நகரில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில், 13 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments